Tuesday 29 November 2016

என்ன செய்ய நினைக்கிறது என்ஐஏ?


கோவையில் சசிக்குமார் என்ற இந்து முன்னணி பொருப்பாளரை அவர்களுக்குள் நடந்த பிரச்சினையின் காரணமாக அவர்களே தீர்த்துக்கட்டிவிட்டு பலியை முஸ்லிம்கள் மீது போட முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை. சவத்தை தூக்கிக்கொண்டு பெரும் கலவரங்கள் செய்தார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள வணிக அங்காடி பொருட்கள் திருடப்பட்டது, தீவைத்து எரிக்கப்பட்டது, அடித்து நொறுக்கப்பட்டது. 

ஆனால் இதை இந்துக்களே கடுமையாக எதிர்த்தார்கள். ஆர்எஸ்எஸ் வகையறாக்களை தூற்றினார்கள். உடனே இறங்கியது டெல்லியிலிருந்து என்ஐஏ என்ற மத்திய புலனாய்வு அமைப்பு. ஐஎஸ் தீவிரவாதிகள் என்று கூறி 16 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. விசாரித்தது... விசாரித்தது... கடைசியில் மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு 3 இளைஞர்கள் மீது சந்தேகம் என்று கூறிவிட்டு அவர்களை கொச்சினுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்று விசாரித்து விட்டு இவர்களிடம் ஏதும் ஆதாரம் இல்லை என்று கூறி விட்டு அவர்களை சேதாரம் ஆக்கிவிட்டுச் சென்றது என்.ஐ.ஏ. இங்குள்ள தமிழக அரசின் காவல்துறையிடம் கூட சொல்லாமல் கைது செய்தது ஏன்? தெரியவில்லை. காரணம் அவர்கள் மறுப்பார்கள் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சாதித்தது என்ன? 
கோவையில் முஸ்லிம்கள் கலவரக்காரர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் அமைதிகாத்தனர். இதனால் இந்து மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான நம்பிக்கை நன்மதிப்பு உயர்ந்தது கூடவே பாஜகவின் மீதான நம்பிக்கை சிதைய ஆரம்பித்தது. இதை மீட்பதற்காகவே மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் என்ஐஏவை கோவையில் களமிறக்கியது ஆளும் மத்திய பாஜக அரசு. மீடியாக்கள் முதல் பக்கங்களில், செய்தி போஸ்டர்களில் முஸ்லிம்களுக்கெதிரான தனது விசத்தை கக்கியது. 

இதோ அடுத்து மதுரையில் அல்காயிதா தீவிரவாதிகள் என்று 4 இளைஞர்களை கைது செய்துள்ளது என்ஐஏ. இதிலும் அதே நடைமுறை தான் தமிழக காவல்துறையிடம் தெரிவிக்காமல் தனது பலத்தைக் காட்டியுள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு. இது பாஜக தமிழகத்தில் காலூன்ற போடும் திட்டங்களில் ஒன்று தான் என்றாலும் தொடர்ந்து இதில் முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவது பரிதாபத்திற்குரியது. 

500,1000 ரூபாய் செல்லாத அறிவிப்பால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் இளைஞர்கள் பாஜக மீது கோபமாய் உள்ளனர். இந்த பிரச்சினைகளை திசைதிருப்பும் முயற்சியாகவே இந்த முஸ்லிம் இளைஞர்களின் கைது செய்துள்ளது மத்திய புலானாய்வு அமைப்பு. இது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயலாகும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். மேலும் மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கினால் முஸ்லிம் இளைஞர்கள் நாடு முழுவதும் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதிப்புகளுக்கும் ஆற்பட்டு வருவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு உகந்தது அல்ல.