Thursday 6 April 2017

கொகோ கோலா குடி பானமா? அழுக்கு நீக்கியா?

கொகோ கோலா குடி பானமா? அழுக்கு நீக்கியா?

கோகோ கோலா என்பது இன்று உலகறிந்த ஒரு பிராண்டு ஆனால் அது குடிக்க ஏற்றதாக உள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். வெறும் விளம்பரத்தினாலே அது மக்களிடையே ஒரு மதிப்பு மிக்க பிராண்டாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சச்சின் டெண்டுல்கர், உலக அழகி ஐஸ்வர்யாராய், அமிதாபச்சன், சாருக்கான் இன்னும் எத்தனையோ விளையாட்டு, சினிமா பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு அதன் செலவெல்லாம் அதை நம்பி வாங்கி குடிக்கும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது.கொகோ கோலா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. அதன் பாட்டில்களினுள் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் கிடந்ததாக , அப்படியே பூச்சிகள் கிடப்பது மட்டுமா சர்ச்சையாகிறது. இல்லை அதனுள் அளவுக்கு அதிகமான இரசாயத்தன்மை இருப்பதும், அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதும் பலர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. நாட்டில் அது தடை செய்யப்படவில்லை. 
நீர் ஆதாரங்கள் பாதிப்பு:
இந்திய நீர் ஆதாரங்கள் இந்த கொகோ கோலா அன் கோவால் அதிகம் பாதிக்கப்படுகிறது. கோலா மற்றும் பாட்டில் குடிநீர் மற்றும் இன்னபிற துணை பிராண்டுகளை அந்நிறுவனம் நமது இந்திய மண்ணில் உற்பத்தி செய்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கேரளாவில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் அந்த ஆலை மூடப்பட்டது, ஆனால் தாமிரபரணி கரையோரங்களில் இன்னும் நீர் உறிஞ்சப்பட்டே வருகிறது. விளம்பர மோகங்களினால் மக்கள் அந்த பானங்களை அதிகம் விரும்பும் போக்கு மாற வேண்டும், இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் அதிகம் விரும்ப வேண்டும். அதுவே மாற்றத்திற்கான வழி.
கோக்கின் Ph மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே உள்ளது. இதன் சல்ப்பியூரிக் அமில அளவும் ஒரு புள்ளிக்கு அதிகமாக உள்ளது.
இந்த பானத்தை தினசரி அருந்துபவர்களில் 44 சதவீதம் வளர்சிதைமாற்றம் ஏற்படுவதாக தேசிய இதயம்,நுரையிரல் மற்றும் இரத்த மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
மேலும் 30 சதவீதம் இடுப்பு  சுற்றளவு அதிகரிக்கிறது.
31 சதவீதம் உடல் பருமன் அதிகரிக்கிறது.
கோக் கறை நீக்கி:
துரு பிடித்த கறைகளை கோக் சிறந்த முறையில் நீக்குிறது.
டாய்லெட் பீங்கானை சுத்தம் செய்ய பயன்படுகிறது
சீன பீங்கான் அழுக்குகளை நீக்கி பளிச்சிட வைக்கிறது

No comments:

Post a Comment