Saturday 21 November 2015

சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


சமூக அக்கறை - "உதவும் உள்ளம்" குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


மழையின் காரணமாக தொண்டு நிறுவன இல்லம் நீரால் சூழப்பட்டுள்ளதால் தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மாணவர்கள் இது போல் இளம் வயதிலேயே சேவை செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இது அவர்களின் மனதை நல்ல நிலையில் வைப்பதோடு சமூக அக்கறையுடன் அவர்கள் வளர இது வழி வகுக்கும். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்ட போது தாம்பரம் காவல்துறையினர் முஸ்லிம் மாணவர்கள் மீது மட்டும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தது தற்போது நினைவுக்கு வருகிறது . இதில் இந்த தொண்டு நிறுவன குழந்தைகளை மழை பாதிப்பிலிருந்து மீட்டு தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆல்வின்ராஜ் அவர்கள் தான் இந்த பள்ளியில் தனது மேற்பார்வையில் தங்க வைத்து உதவி வருகிறார். அவரின் செயலை பாராட்டிய மாணவர்கள் அவரால் சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். 
காவல்துறையினர் மாணவர்கள் விசயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் சில கட்சிகள் அல்லது பாசிச அமைப்புகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து வழக்குகளை பதியவைப்பது, மாணவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்வதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, அவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும், அவர்களின் மனதில் உயர்ந்த சிந்தனைகளையும், இலட்சியங்களையும் விதைப்பார்களேயானால் மாணவர்கள் தமது சிறிய தவறுகளைக் கூட உணர்ந்து திருந்தி சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே காவல்துறை தனது செயல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்களும் இது போன்ற சேவைகளையும், தனது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment