Friday 6 November 2015

கோவையில் வெடிகுண்டு தயாரித்த ஒருவர் இறப்பு, மூன்று பேர் கைது

கோவையில் உக்கடம் பைபாஸ் சாலை அருகே கீரைத்தோட்டம் என்ற பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரது வீட்டில் அவரது மகன் நவீன் மற்றும் மூன்று பேர் சேர்ந்து நாட்டு வெடிகளை தயார் செய்து உள்ளனர். நேற்று(05.11.2015) அன்றுவெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நவீன் மற்றும் இருவர் காயங்களுடன் தப்பித்தனர். வீடும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

      காவல்துறையினர் சென்று பார்த்த போது வீடு முழுக்க வெடி மருந்துகளும், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருள்களும் பதுக்கி வைத்திருந்துள்ளனர். காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்துள்ளனர். வெடிகளை தயாரித்தவர் சிவா என்பவராவார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தயாரித்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த சண்முகம், தேவி, துளசிமணி ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் வெடிவிபத்தின் போது வீட்டில் இல்லை. ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் வீட்டில் வசித்தவர்களை கைது செய்துள்ளனர். 

அந்த வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. உண்மையில் அவர்கள் தயாரித்தது பட்டாசு என்றால் வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழ காரணம் என்ன? வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் சண்முகத்தின் மகன் நவீன் உட்பட மூவர் வெடிகளை தயாரித்துள்ளனர். அந்த மூவர் யார்? இறந்தவரின் விபரம் என்ன? வெடிகளை தயாரித்தவர்களின் பிண்னணி என்ன என்பதை காவல்துறை தெரியப்படுத்தவேண்டும். ஆனால் எதுவும் வெளிவராது. இத்துடன் அந்த சம்பவம் முடித்து வைக்கப்படும். ஊடகங்களும் இந்த செய்திக்கு முக்கியம் கொடுக்காது. 

     இந்த வெடிகளை தயாரித்தவர்களில் ஒருவரது பெயராவது முஸ்லிமாக இருந்திருந்தால் இந்த செய்தி தான் இன்றைய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியிருக்கும். தொலைகாட்சிகளில் விவாதம் என்ற பெயரில் கத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் சிவா, நவீன் ஆகிய பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் இல்லையே அதனால் செய்தி இத்துடன் முடிந்து விடும். பாருங்கள் ஊடகங்கள் ஒரு செய்தியை எப்படி திசை மாற்றுகின்றன. அதன் மூலம் ஒரு சமூகத்தையே எப்படி  நிலைகுலையச் செய்கின்றன என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும். ஊடகங்களுக்கான அறம் இதுவல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment