Tuesday 22 December 2015

டெல்லி பாலியல் குற்றவாளி விடுதலை சிறார் என்பதால் மட்டும் தானா?

பெயர் தெரியாத பாலியல் பயங்கர குற்றவாளி
நிர்பயா என்று மரணத்திற்கு பின் புனைப்பெயர் வைக்கப்பட்ட ஜோதிசிங் என்ற இளம் பெண் பேரூந்தில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கடைசியில் அவளது பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சிதைக்கப்பட்ட நிலையில் பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். இது போன்ற கொடூரங்கள் டெல்லியில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாடு முழுக்க ஆதிக்கவாதிகளால், சாதி வெறியர்களால், மத வெறியர்களால் தொடர்ந்து இது போன்ற பயங்கரமான பாலியல் வன்முறைகள் நடத்தப்படுகிறது. ஆனால் பல இடங்களில் வழக்குகள் கூட பதியப்படுவதில்லை. தமிழகத்தில் சிறுமிகள் புனிதா, திருச்சி தவ்பீக் சுல்தானா என பட்டியல் நீள்கிறது. ஆனால் எடுத்த நடவடிக்கைகள் பெரிதாய் ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும். காரணம் இங்கு நீதியின் முறை அப்படிப்பட்டது. 

டெல்லியில் நிர்பயா என்ற ஜோதி சிங் வழக்கு நாடு முழுக்க பேசப்பட்டது. ஊடகங்களின் வெளிச்சம் உலகளாவிய அளவில் பாய்ச்சப்பட்டது. காரணம் அதற்குள் ஒளிந்திருந்த அரசியல் பாஜக காங்கிரசுக்கு எதிராக இந்த பிரச்சினையை பெரிதாக கிளப்பியது. நடுத்தர வர்க்க மீடியா வெளிச்சப் போராட்டக்காரர்களை இறக்கி அதில் வெற்றியும் பெற்றது பாஜக. ஆனால் இன்று அதே பாஜக ஆட்சி தான் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்புகளைப்பற்றி வாய் திறக்க எவரும் முன்வரவில்லை. காரணம் பாஜகவின் அரசியல் யுக்திகள் அப்படியானது தானே. 
உச்சநீதிமன்றம்


நீதிமன்றம் குற்றவாளி கைது செய்யப்படும்போது 18 வயது பூர்த்தியாகவில்லை அதனால் அவன் சிறுவன் என்று கூறி மூன்றாண்டுகள் சிறைக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது. தற்போது அவனுக்கு வயது 21. இப்போது பலர் அவனது விடுதலைக்கு எதிராக போராடி வந்தாலும், சிலர் வலைப்பக்கங்களில் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் போன்ற பழிவாங்குதல் கூடாது என்றும் தி இந்து தமிழ் வலைப்பக்கத்தில் சிந்தனைக்களம்- இப்படிக்கு இவர்கள் (http://goo.gl/kZkiww ) பகுதியில் கூட ச.சீ.இராஜகோபாலன் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு முன்பு இவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ச.சீ.இராஜகோபாலன் நிர்பயாவின் பெற்றோர் அந்த கொடூரனை ஏற்று திருத்த வேண்டும் என்று கூறுகிறார். அதை ஏன் அவரே செய்யக்கூடாது. 

சட்டத்துக்கு புறம்பாக இளம் குற்றவாளியை சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று இந்நாட்டின் உச்சநீதிமன்றம் கூறி விடுதலை செய்கிறது. அதுவும் பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்து அவன் குற்றமிழைத்தவன் என்று தெரிந்தும் அவனை விடுதலை செய்யும் நீதிமன்றம் அவனை ரகசியமாக விடுதலைசெய்து பாதுகாப்பதோடு அவனுக்கு உதவித்தொகையும், தையல் எந்திரமும் வழங்கியுள்ளதாக செய்திகளில் பார்க்கின்றோம். இன்று வரை அவனது பெயரைக் கூட வெளியிடவில்லை.

ஆனால் அவன் ஒருவேளை முஸ்லிம் பெயர் கொண்டவனாக இருந்திருந்தால் கூட்டு மனசாட்சிக்கு உட்படுத்தி நிதிபதிகள் வேறு மாதிரியான தீர்ப்பை கொடுத்திருப்பார்கள்.

கோவை குண்டுவெடிப்பு விசாரணைக்காக, காவல்துறை 7 சிறார்களை கைது செய்து சிறையிலடைத்தது. அதற்காக போலியான வயது சான்றிதழ்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்தது ஆனால் அதை ஆராய்ந்து கூட பார்க்காமல் அவர்களை சிறையிலடைத்தனர் நீதிபதிகள். பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறி 11 மற்றும் 13 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்தது. இவர்களுக்கெல்லாம் இந்தச் சட்டங்கள், நீதி நெறிமுறைகள் பொருந்தாதா? அப்படியானால் இந்நாட்டில் நீதி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதா? 
ஜோதிசிங்கின் பெற்றோர்கள் பத்ரி சிங்கும்,ஆஷாதேவியும் தொடர்ந்து போராடுகிறார்கள் இந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பாவம் இப்போது எந்த அரசியல்வாதிகளும் இவர்களை கண்டுகொள்வதில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இந்திய பிரதமர் மோடியைக் கூட ஒரு முறை அவர்கள் சந்தித்தார்கள். எதுவும் நடக்கவில்லை. நடக்காது என்று தெரிந்து தான் இப்போது வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.

இது மனுதர்ம நீதியின் நீட்சி அல்லது இந்துத்துவ பாசிச நீதி என எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். அவனது விடுதலை, அவனது இருப்பு இங்கு பாசிசவாதிகளுக்கு தேவையாக இருக்கலாம். ஒரு வேளை அவன் குஜராத் வன்புணர்வுகளில் சம்பந்தப்பட்டவனாக இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து குழந்தையை தனது சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் எறிந்தவனாய் இருக்கலாம். அதற்காகவே பழக்கப்பட்டவர்களில் ஒருவனாய் இருக்கலாம். காரணம், அவர்கள் செய்யும் செயலைத்தான் டெல்லியில் நிர்பயா மீதும் செய்துள்ளான் இறுதியில் இரும்பு கம்பி கொண்டு அவளது பெண்ணுறுப்பில் குத்தி சிதைத்துள்ளான். இத்தகைய குணம் படைத்தவர்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். குஜராத் இனப்படுகொலைகள், வன்புணர்வுகளில் ஈடுபட்டவர்களையும், சூலாயுதங்களையும் கம்பிகளையும் கொண்டு பெண்ணுறுப்புகளை சிதைத்தவர்களையும், கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழித்து தீயிட்டவர்களையும் இந்த பாலியல் கொலையை செய்தவர்களையும் பொருத்திப் பாருங்கள் ஒரு உண்மை உங்களுக்குப் புரியும்.

No comments:

Post a Comment